Monday, April 26, 2010

அயல்தேசத்து ஏழை


இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை...

வந்தவனுக்கோ சென்று விட ஆசை...

இதோ

அயல்தேசத்து ஏழைகளின்..

கண்ணீர் அழைப்பிதழ் !

விசாரிப்புகளோடும்

விசா அரிப்புகளோடும் வருகின்ற ...

கடிதங்களை நினைத்து நினைத்து

பரிதாபப்படத்தான் முடிகிறது !

நாங்கள் பூசிக்கொள்ளும்சென்டில்

வேண்டுமானால்...

வாசனைகள் இருக்கலாம்!

ஆனால்

வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்....

துக்கம் அழிக்கின்றோம்!

ஏக்கம் என்ற நிலையிலேயே....

இளமை கழிக்கின்றோம்!

எங்களின்நிலாக்கால நினைவுகளையெல்லாம்...

விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு

கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே

கடல் தாண்டி வந்திருக்கிறோம் !

மரஉச்சியில் நின்று ...

தேன் கூட்டை கலைப்பவன் போல!

வாரவிடுமுறையில்தான்..

பார்க்க முடிகிறது

இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு

எழுந்த நாட்கள் கடந்து விட்டன!

இங்கே

அலாரத்தின் எரிச்சல் கேட்டு

எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள்

பழகிய நண்பர்கள்

கல்லூரி நாட்கள்தினமும்
ஒரு இரவு நேரகனவுக்குள்

வந்து வந்து

காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு

விளையாடி மகிழ்ந்த

உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் !

இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...

விசாவும் பாஸ்போட்டும் வந்து...

விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ®'ன்றாய் வளர்ந்த

நண்பர்களின் திருமணத்தில் !

மாப்பிள்ளை அலங்காரம் !

கூடிநின்று கிண்டலடித்தல் !

கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !

பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி

வறட்டு பிடிவாதங்கள் !

சாப்பாடு பரிமாறும் நேரம்...

எனக்கு நிச்சயித்தவளின் ®"ரப்பார்வை!

மறுவீடு சாப்பாட்டில்

மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்

"கண்டிப்பாய் வரவேண்டும் "

என்றசம்பிரதாய அழைப்பிதழுக்காக...

சங்கடத்தோடு
ஒரு

தொலைபேசி வாழ்த்தூனூடே...

தொலைந்துவிடுகிறது

எங்களின் நீண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?

நாங்கள்அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் - கடிதத்திலும்

வருகின்றசொந்தங்களின்...

நண்பர்களின் ...

மரணச்செய்திக்கெல்லாம்

அரபிக்கடல் மட்டும்தான்...ஆறுதல் தருகிறது!

ஆம்இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...

ஒரு

கடலைத்தாண்டிய கண்ணீரிலையே

கரைந்துவிடுகிறார்கள்;!

" இறுதிநாள் " நம்பிக்கையில்தான்...

இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் - இழப்பையும்

கணக்கிட்டுப் பார்த்தால்

எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்முதல் ஸ்பரிசம் ...

முதல் பேச்சு...முதல் பார்வை...முதல் கழிவு...

இவற்றின் பாக்கியத்தைதினாரும் - திர்ஹமும்தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லிகுழந்தை அழும் சப்தத்தை...

தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே

நாங்கள் தொலைவில் அழும்

சப்தம்யாருக்குக் கேட்குமோ ?

®'வ்வொருமுறைஊருக்கு வரும்பொழுதும்...

பெற்றகுழந்தையின்வித்தியாசபார்வை...

நெருங்கியவர்களின்திடீர்மறைவு ....

இப்படி புதிய

முகங்களின்எதிர்நோக்குதலையும்...

பழையமுகங்களின்மறைதலையும் கண்டு...

மீண்டும்அயல்தேசம்

செல்லமறுத்துஅடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...

தந்தையின் கடனும்...

பொருளாதாரமும் வந்து...

சமாதானம் சொல்லிஅனுப்பிவிடுகிறதுமீண்டும் அயல்தேசத்திற்கு!

நன்றி--எழுதியவருக்கு ....

Thursday, December 18, 2008

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!

ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்கஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைஉருவாக்கிக் கொள்ளுங்கள்.
***************
உங்களது அன்றாட நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
***************
எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.
***************
ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
***************
நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
***************
நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
***************
நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.
***************
மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
***************
மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.